தந்திகள் அறுந்த வீணைகளை பெரு
விரல்களின் நுணிகளால்
தடவிப் பார்த்துக்
கொண்டே
கடந்த காலத் தாள்களின்
கரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளுக்கு
கண்மைகளைத் தடவித்
தடவி தடயங்களை மீட்டுக்
கொண்டிருந்தேன்
வேலிகள் பறித்த பயிர்களையும்..!
தாலிகள் அறுத்த உயிர்களையும்..!
மாலைகள் அறுத்த சோலைகளையும்..!
ஆவிகள் குடித்த ஆலைகளையும்..!
அருவிகள் இழந்த ஆறுகளையும்...!
விடலைகள் தொலைத்த மாதுகளையும்...!
இளமைகள் தொலைத்த கிழவிகளையும்...!
படலைகள் இழந்த வளவுகளையும்...!
கற்பங்கள் தொலைந்த கன்னிகளையும்...!
புழுதி படிந்த தேசப்படங்களில்
தடவிப் பார்த்து என்
தேசங்களை
அடையாளம் காண நேருமென்று
நான்
இதுவரை எண்ணியதில்லை
என் பாட்டனும் சொன்னதில்லை.
முல்லைக்கேசன்
விரல்களின் நுணிகளால்
தடவிப் பார்த்துக்
கொண்டே
கடந்த காலத் தாள்களின்
கரைந்து கொண்ட முற்றுப் புள்ளிகளுக்கு
கண்மைகளைத் தடவித்
தடவி தடயங்களை மீட்டுக்
கொண்டிருந்தேன்
வேலிகள் பறித்த பயிர்களையும்..!
தாலிகள் அறுத்த உயிர்களையும்..!
மாலைகள் அறுத்த சோலைகளையும்..!
ஆவிகள் குடித்த ஆலைகளையும்..!
அருவிகள் இழந்த ஆறுகளையும்...!
விடலைகள் தொலைத்த மாதுகளையும்...!
இளமைகள் தொலைத்த கிழவிகளையும்...!
படலைகள் இழந்த வளவுகளையும்...!
கற்பங்கள் தொலைந்த கன்னிகளையும்...!
புழுதி படிந்த தேசப்படங்களில்
தடவிப் பார்த்து என்
தேசங்களை
அடையாளம் காண நேருமென்று
நான்
இதுவரை எண்ணியதில்லை
என் பாட்டனும் சொன்னதில்லை.
முல்லைக்கேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....