புதன், 28 ஆகஸ்ட், 2013

யாசகம்



என் இளவட்டங்கள் எல்லாம்

போதையின்

மடியில் இள நெஞ்சுகளைத்

தாலாட்டியபடியே

தங்கக் குவளைகளுக்கு தாம்பூலம்

பூசிக்கொண்டு

உறங்குகிறார்கள்

நான் மட்டும் பேதையின் அடியில்

ஏனெனில்

உன்னைக் காணும் போதெல்லாம்

என்

மொழித் தேசத்தில்

வார்த்தைக்கு பஞ்சம்

ஏற்பட்டு வீதியோரங்களில் எல்லாம்

யாசகம் செய்ய

தொடங்கி விடுகிறது என்

நா - நான் ஏது செய்ய

இருக்கின்ற ஒன்றிரண்டும்

இமைகின்ற பொழுதில்

திர்ந்து விடுகிறதே

இறைவா...!



முல்லைக்கேசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....

ஈழத்து மண்ணின் வாசங்கள் வீசும் தமிழ்க் கவிதைகளை இத் தளத்தில் நீங்கள் பார்வையிடலாம். என் போன்று வளர்ந்து வரும் இளம் கவிஞர்களுக்கு தங்கள் ஆதரவுகள் இன்றியமையாதவை. இன் முகத்துடன் உங்கள் முல்லைக்கேசனாய்...

தொடர்புகட்கு

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *