என் இளவட்டங்கள் எல்லாம்
போதையின்
மடியில் இள நெஞ்சுகளைத்
தாலாட்டியபடியே
தங்கக் குவளைகளுக்கு தாம்பூலம்
பூசிக்கொண்டு
உறங்குகிறார்கள்
நான் மட்டும் பேதையின் அடியில்
ஏனெனில்
உன்னைக் காணும் போதெல்லாம்
என்
மொழித் தேசத்தில்
வார்த்தைக்கு பஞ்சம்
ஏற்பட்டு வீதியோரங்களில் எல்லாம்
யாசகம் செய்ய
தொடங்கி விடுகிறது என்
நா - நான் ஏது செய்ய
இருக்கின்ற ஒன்றிரண்டும்
இமைகின்ற பொழுதில்
திர்ந்து விடுகிறதே
இறைவா...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
முல்லைக்கேசனுக்கான உங்கள் கருத்துக்கள்....