எம் மார்புகள் கிழித்த சன்னங்களுக்கு உடனே
மருந்துகள் போடுங்கள்
ஏனென்றால்
நாம் மனிதர்கள் அல்லர் வீர
மறவர்கள்
ஈழத்தின் வீரத் தமிழர்கள்
நெல்லரிசிச் சோற்றுக்கும்
நெய்விட்ட
தோசைக்கும்
வயிற்றை வாடகைக்கு
தந்தவர்கள் தினம் நெருப்புக் குழம்புகளை
பிசைந்து தின்றவர்கள்
மானத் துணிகளில் விசிறிக் கோவணங்கள்
கட்டியவர்கள்
அதனால்த் தான் புழுங்கினேன்
சன்னங்களின் ஜீவனுக்காய்
மருந்துகள் போடென்று - பார்
என் நெஞ்சுகள் கிழித்திருக்கும்
நீலமும்
பாரித்திருக்கும்.
முல்லைக்கேசன்